வீட்டின் உள்ளே சுத்தமாக காற்று இருக்க என்ன செய்ய வேண்டும்

வீட்டின் உள்ளே சுத்தமாக காற்று இருக்க என்ன செய்ய வேண்டும்
What-should-be-fresh-air-inside-the-house

வீட்டின் உள்ளே சுத்தமாக காற்று இருக்க என்ன செய்ய வேண்டும்

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பலர் வேலை பளுவினை விட சுகாதாரமற்ற காற்றினாலேயே சோர்வாகின்றனர். நோயாளி ஆகின்றனர். வீட்டுக்குள் இருக்கும் காற்று அதிக சுகாதாரமற்று இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

காலை முதல் இரவு வரை பணி செய்யும் இடத்திலேயே காலத்தினை செலவழிப்பவர்கள் இன்று பலர் உள்ளனர். மிகவும் சோர்ந்து இரவு வீடு திரும்பும் இவர்களுக்கு வீடுதான் சொர்க்கம். அவர்கள் வீட்டில் விடும் மூச்சுதான் நிதானமான மூச்சு. ஆரோக்கியமான காற்று தான் அவர்களின் முதல் சக்தி. இந்த காற்று தூய்மையானதாக இல்லாவிட்டால் அதுவே அவர்களை மேலும் சோர்வாக்கி நோயாளி ஆக்கி விடும். பலர் வேலை பளுவினை விட சுகாதாரமற்ற காற்றினாலேயே சோர்வாகின்றனர். நோயாளி ஆகின்றனர்.

வீட்டுக்குள் இருக்கும் காற்று அதிக சுகாதாரமற்று இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டினுள்ளேயே வேலை செய்து காலத்தினை கடப்பவர்களும் உண்டு. அத்தகையோர் கூடுதலாக உடல் பாதிப்பினை அடைகின்றனர். ஆக வீட்டினுள் காற்று சுத்தமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.


* வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகளை வளர்க்க வேண்டும். செடிகளுக்கு காற்றின் மாசினை குறைக்கும் சக்தி உண்டு. இதுவே தீர்வு என்றாகி விடாது. ஆனாலும் இந்த முயற்சி சிறிதளவு தீர்வினைத் தரும். செடிகள் மனதிற்கும் இதம் அளிக்கும்.

* வீட்டினுள் வெளிக்காற்று வந்து செல்ல ஜன்னல்களை தகுந்த பாதுகாப்போடு திறந்து வையுங்கள். வெளிக்காற்று தூசு வராமலிருக்க அவற்றினை வலைகளின் மூலம் தடுத்து விடுங்கள். அதிக ரசாயனப் பொருட்களை கொண்டு வீடு, பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அந்த கடினமான வாசனை-உடனே காற்றில் வெளியேற வேண்டும். இல்லையெனில் நச்சு வாசனை உடலில் அலர்ஜி மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தும். வெளியில் அணிந்து செல்லும் ஷீ, செருப்புகளோடு வீட்டிற்குள் நுழையாதீர்கள். பல வகை கிருமிகளை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுவீர்கள். அடிக்கடி உங்கள் ஷீ, செருப்புகளை முறையாக கழுவி விடுங்கள்.

* கார்பெட் எனும் தரை விரிப்பு பார்க்க மிக அழகுதான். ஆனால் அதனை அக்கறை எடுத்து சுத்தம் செய்யாவிட்டால் எண்ணற்ற கிருமிகளின் இருப்பிடம் ஆகி விடும். நோய்க்கு குறைவே இருக்காது. எனவே கார்பெட் உபயோகிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக அதனை பராமரிக்க வேண்டும்.

* அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காதீர்கள். உங்கள் கேஸ் ஸ்டவ், ஹீட்டர், சிம்னி இவைகளை முறையாய் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
இயற்கை முறையில் மூளையினை ஆரோக்கியமாக வைக்கும் வழிகள் ஒருவரது மூளை அவரது உடலின் முக்கியமான உறுப்பு. மூளையினையும் மனதினையும் இங்கு பிரித்து பார்க்க வேண்டும். இங்கு குறிப்பிடப்படுவது மூளையினைப் பற்றிதான்.

* தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். இது உங்கள் மூளை, மனது, உடல் மூன்றினையும் பாதுகாக்கும். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் கலாச்சாரத்தில் பிணைந்த இது மிகப்பெரிய இயற்கை மருந்து. வயிறு காலியாய் இருக்கும் நேரத்தில், அமைதியாய் ஓர் இடத்தில் அமர்ந்து, முதுகு நிமிர அமர்ந்து, கண்களை மூடி மூச்சினை மட்டும் கவனித்தால் போதும் மூச்சு நிதானமாய் நிகழ வேண்டும். இதனை காலையில் செய்வது மிகவும் நல்லது.
* எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருங்கள். அப்பொழுதுதான் மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும்.

* பகலில் 20 நிமிடங்கள் நாற்காலி (அ) சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி ஓய்வு எடுங்கள். இது உங்கள் மூளையின் செயல்திறனை வெகுவாய் கூட்டும்.

* குறுக்கெழுத்து போட்டிகள், புதிர்கள் இவைகளைச் செய்யுங்கள்.

* ஒரு நேரத்தில் செய்யும் வேலை ஒன்றின் மீதே கவனம் செலுத்துங்கள். போன் பேசிக் கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே அப்படியே டிவியும் பார்ப்பது போன்ற செயல்களால் மூளையால் எதனையும் முழுமையாய் கையாள முடியாது.

* புதுமொழி ஒன்றினைக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்கு வயது வரம்பு கிடையாது. இது மூளைக்கான சிறந்த பயிற்சி.

* ஆரோக்கியமான உணவினை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

* எழுதுங்கள். கம்ப்யூட்டரில் டைப் அடிப்பதனை விட எழுதுவது வலது பக்க மூளையினை நன்கு தூண்டும்.

* எதனையும் ஆக்கப் பூர்வமாகவே சிந்திக்கப் பழகுங்கள்.

* பட்டை தூளினை சிறிது, நீரில் கொதிக்க வைத்து குடியுங்கள். இது உங்களை ‘ரிலாக்ஸ்’ செய்யும்.

மன அழுத்தம் நீங்க வழிகள் - Ways-to-Stay-Out-of-Stress

மன அழுத்தம் நீங்க வழிகள் - Ways-to-Stay-Out-of-Stress
மன அழுத்தம் நீங்க வழிகள் - Ways-to-Stay-Out-of-Stress

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தற்கால சூழ்நிலையில் பள்ளிக்கு போகும் சிறுவர்கள் முதல் ஓய்வு பெறும் முதியோர்கள் வரை எல்லோரும் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர்.

தற்கால சூழ்நிலையில் பள்ளிக்கு போகும் சிறுவர்கள் முதல் ஓய்வு பெறும் முதியோர்கள் வரை எல்லோரும் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர்.
பள்ளிக்குப் போகும் சிறுவர்கள் பள்ளியில் ஹோம் ஒர்க் அதிகமாக கொடுக்கும் போதும், அதிகமாக படிக்க வேண்டிய நேரத்திலும், பரிட்சை சமயத்திலும், குழந்தைகளுக்கு பிரியமில்லாத ஒன்றை பல வந்தமாக திணிக்கும் போதும் பள்ளிப் படிப்புக்கு கட்ட வேண்டிய பணத்தை காலத்திற்கு சரியாக கட்ட முடியாத நிலையில் பள்ளி நேரத்தில் பல மாணவர்கள் முன்னால் பள்ளியின் ஆசிரியர் கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போதும், வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் முன்னால் அடிக்கடி சண்டை போடும் போதும், சிறு வயதினர் தனக்கு ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்த போது இதுநாள் வரைக்கும் தன் மீது அதிக பிரியத்தை காட்டிய பெற்றோர்கள் தன்னைவிட பிறந்த குழந்தையின் மீது அதிக பிரியத்தை காட்டும்போதும் சிறுவயதினர் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தலைவலி, கழுத்துவலி, வயிற்று வலி போன்ற கோளாறுகளுக்கு உட்படுவர். மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போய் காட்டும் போது மருத்துவர் பரிசோதித்து பார்த்து உடலில் எந்தவிதமான கோளாறும் இல்லை என்று கூறிவிடுவார்.


 பெற்றோர்கள் தன் பிள்ளைகள் ஒரு டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் பள்ளி இறுதி ஆண்டில் 90 சதவீதம் விட அதிக மார்க் வாங்க வேண்டும். இல்லையென்றால் கல்லூரியில் இடம் கிடைக்காது என்று அடிக்கடி கூறும்போது அதிக மார்க் வேண்டுமே என்று மாணவ, மாணவியர்கள் பயப்படும் போது அதிக மன அழுத்தத்திற்கு உட்பட்டு உயர் ரத்த அழுத்தம், வயிற்றில் புண், அதிக அமில சுரப்பு போன்றவைகளால் பாதிக்கப்படுவர்.

கல்லூரி படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் அல்லது நன்கு கவனம் செலுத்தி படிப்பவர்களும் கூட காதல் போன்ற விஷயங்களில் சிக்கிக் கொண்டு பிறகு குடும்பத்திற்கு தெரியக்கூடாது என்று மறைக்க முயலும் போதும், குடும்பத்திற்கு தெரிந்த பிறகு பெற்றோர்களால் கடுமையாக கண்டிக்கப்படும் போதும் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியாமல் மனபாதிப்புக்கு உள்ளாவர். பள்ளி பருவத்திலிருந்து கல்லூரி படிப்பு முடியும் காலம் வரை நேரத்திற்கு சரியாக பிள்ளைகள் வீட்டுக்கு வரவில்லை என்றால் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டார்கள் அல்லது பிள்ளைகள் தவறான பாதையில் போகிறார்களா என நினைத்து பெற்றோர்கள் கலக்க முறுவர்.

கல்லூரி படிப்பிற்கு பிறகு தனது படிப்புக்கு தகுந்த உத்தியோகம் கிடைக்காத போதும் தனக்கு பிரியமில்லாமல் திருமணம் செய்து கொண்ட நிலையிலும் படிப்பிற்கு எந்த ஒரு வேலையையும் செய்யாமல் ஊர்சுற்றி வரும் பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்கள் தன் சுற்றம், நண்பர்கள், அக்கம் பக்கம் உள்ள வீட்டினரிடம் குறை கூறும்போதும், வாகனங்களில் செல்லும் போது நெரிசலான இடங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தி போகும் போதும் ஒரு பாதிப்புக்கு உள்ளாவர்.

பெரியவர்கள் சொத்துத் தகராறு, தொழிலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, வீட்டில் யாராவது இறந்து போதல், உத்தியோகத்தில் மேலதிகாரி அல்லது தனக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் விவாதிக்கும்போது, தனது வேலையை சரியாக செய்யாமல் சிக்கிக் கொள்ளும் போதும், வயதானவர்கள் தன்னுடைய பிள்ளைகள் தன்னை சரியாக கவனிக்காமல் உதாசீனப்படுத்தும் போதும், இப்படி வாழ்க்கையில் பல சூழ்நிலையில் பல கால கட்டங்களில் பல்வேறு காரணங்களினால் கோபப்படுவது தவறு செய்வதனால் ஏற்படும் குற்ற உணர்வு, பயப்படுவது, சலிப்புறுவது மற்றும் கோபப்படுவதினால் உடலும், மனமும் அதிகளவு பாதிக்கப்படுகிறது.

மனஅழுத்தம் ஏற்படும் ஒவ்வொரு சமயமும் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரியின் மூலம் உடலின் இயக்கம் அனைத்தும் அதிக பரபரப்புடன் செயல்படத் தூண்டுகிறது மூளை. இதனால் இருதயத்துடிப்பு அதிகரித்து தசை நரம்புகளில் ரத்தத்தை அதிகமாக நிரப்புகிறது. உமிழ்நீர் சுரப்பிகள் அடைப்பட்டு வாய் உலர்ந்து போகிறது. பிராண வாயு தேவைக்காக சுவாசம் வேகப்படுகிறது. சக்தி பெருக சர்க்கரையும் கொழுப்பும் ஏராளமாக ஈரலில் இருந்து வெளியேறுகிறது. ஜீரணிப்பு நின்று போகிறது. அதனால் ரத்தம் தசைகளுக்குள் திசை மாறி பாய்கிறது. அகண்ட கண் பார்வை உண்டாகிறது. உடலில் வியர்வை பெருகி சூடு குறைகிறது. அட்ரினலின், நாரட்னயின் போன்ற ஹார்மோன்களை அட்ரீனல் சுரப்பி வெளியிடுகின்றன. தோல் சார்ந்த உபரிக் கொழுப்பும், ரத்தத்துக்குள் கலந்து விடுகின்றன.

கழிவு அகற்றும் குடலும், சிறுநீரகமும் வேலையை குறைத்துக் கொள்வதால் உடல் தொடங்குகிறது. இதனால் உடலின் இயல்பான இயக்கம் பாதிக்கப்படுகிறது.
மனித உடலில் நரம்புகள் மற்றும் நாளமில்லா சுரப்பி தொகுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் வரையில் உடலும், மனமும் புற உலக பாதிப்புக்கு உட்படும் போது, சிறிது நேரத்தில் மீண்டும் தனது இயல்பான செயல் நிலைக்கு திரும்புகின்றன. ஆனால் நரம்புத் தொகுப்பு மற்றும் சுரப்பிகளின் ஹார்மோன் அளவுகள் இடையிலான சமநிலை பாதிக்கப்பட்டால் ரத்த அழுத்தம், உடல், மனசோர்வு, மனஉளைச்சல் மற்றும் நரம்பு தொடர்பான நோய்களும் உண்டாகின்றன.

மேலும் முக்கிய சுரப்பிகளின் செயல்பாடு சீர்குலையும் போது உடலின் வளர் சிதை மாற்ற சமநிலை பாதிக்கப்பட்டு உடலில் பல கடுமையான நோய்களை தோற்றுவிக்கின்றன. யோகாசனங்களின் ஒவ்வொரு நிலைகளும் ஒரு குறிப்பிட்ட முறையில் செயலாற்றி நரம்பு மண்டலத்தை தூய்மைப்படுத்தி பலப்படுத்துவதுடன் அங்கு நரம்பு வேதியல் செய்து பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் அனைத்து நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தையும் சீர்படுத்தி சமநிலையில் செயல்படத்தூண்டுகின்றன.

தினமும் 15-20 நிமிடம் செய்யும் பிராணாயாமம் யோக நித்திரை, தியானம் போன்ற பயிற்சிகள் மனஇறுக்கம், அழுத்தத்தை நீக்குவதுடன் அன்றாட வாழ்க்கையில் நமது மனம் இரண்டு நிலையில் செயல்படும் ஆற்றலை அளிக்கின்றன. ஒன்றுபுற உலக பாதிப்பிற்கு மனம் உட்பட்டாலும், உடனடியாக தனது இயல்பான நிலைக்கு திரும்பும் ஆற்றல், மற்றொன்று புறவுலக பாதிப்புகளை எதிர்த்து செயல்படுதலும் அப்படி செய்யப்படும் போது உடல் இயக்கம் பாதிக்கப்படாமல் மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. மனஅழுத்தத்தை நீக்குவதற்கு பல்வேறு யோகப் பயிற்சிகள் உள்ளன.

வாயு தொல்லை - கொழுப்பை குறைக்கும் பிரண்டை

வாயு தொல்லை - கொழுப்பை குறைக்கும் பிரண்டை
Gas-trouble-cholesterol-control-pirandai.

வாயு தொல்லை - கொழுப்பை குறைக்கும் பிரண்டை

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு மருந்தாக என பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது பிரண்டை.

எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு மருந்தாக அமைவதுமான பிரண்டையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?. வீட்டில் எளிதில் வளர்க்க கூடிய பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.


எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.

வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.