வீட்டின் உள்ளே சுத்தமாக காற்று இருக்க என்ன செய்ய வேண்டும்

வீட்டின் உள்ளே சுத்தமாக காற்று இருக்க என்ன செய்ய வேண்டும்
What-should-be-fresh-air-inside-the-house

வீட்டின் உள்ளே சுத்தமாக காற்று இருக்க என்ன செய்ய வேண்டும்

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பலர் வேலை பளுவினை விட சுகாதாரமற்ற காற்றினாலேயே சோர்வாகின்றனர். நோயாளி ஆகின்றனர். வீட்டுக்குள் இருக்கும் காற்று அதிக சுகாதாரமற்று இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

காலை முதல் இரவு வரை பணி செய்யும் இடத்திலேயே காலத்தினை செலவழிப்பவர்கள் இன்று பலர் உள்ளனர். மிகவும் சோர்ந்து இரவு வீடு திரும்பும் இவர்களுக்கு வீடுதான் சொர்க்கம். அவர்கள் வீட்டில் விடும் மூச்சுதான் நிதானமான மூச்சு. ஆரோக்கியமான காற்று தான் அவர்களின் முதல் சக்தி. இந்த காற்று தூய்மையானதாக இல்லாவிட்டால் அதுவே அவர்களை மேலும் சோர்வாக்கி நோயாளி ஆக்கி விடும். பலர் வேலை பளுவினை விட சுகாதாரமற்ற காற்றினாலேயே சோர்வாகின்றனர். நோயாளி ஆகின்றனர்.

வீட்டுக்குள் இருக்கும் காற்று அதிக சுகாதாரமற்று இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வீட்டினுள்ளேயே வேலை செய்து காலத்தினை கடப்பவர்களும் உண்டு. அத்தகையோர் கூடுதலாக உடல் பாதிப்பினை அடைகின்றனர். ஆக வீட்டினுள் காற்று சுத்தமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.


* வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகளை வளர்க்க வேண்டும். செடிகளுக்கு காற்றின் மாசினை குறைக்கும் சக்தி உண்டு. இதுவே தீர்வு என்றாகி விடாது. ஆனாலும் இந்த முயற்சி சிறிதளவு தீர்வினைத் தரும். செடிகள் மனதிற்கும் இதம் அளிக்கும்.

* வீட்டினுள் வெளிக்காற்று வந்து செல்ல ஜன்னல்களை தகுந்த பாதுகாப்போடு திறந்து வையுங்கள். வெளிக்காற்று தூசு வராமலிருக்க அவற்றினை வலைகளின் மூலம் தடுத்து விடுங்கள். அதிக ரசாயனப் பொருட்களை கொண்டு வீடு, பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அந்த கடினமான வாசனை-உடனே காற்றில் வெளியேற வேண்டும். இல்லையெனில் நச்சு வாசனை உடலில் அலர்ஜி மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தும். வெளியில் அணிந்து செல்லும் ஷீ, செருப்புகளோடு வீட்டிற்குள் நுழையாதீர்கள். பல வகை கிருமிகளை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுவீர்கள். அடிக்கடி உங்கள் ஷீ, செருப்புகளை முறையாக கழுவி விடுங்கள்.

* கார்பெட் எனும் தரை விரிப்பு பார்க்க மிக அழகுதான். ஆனால் அதனை அக்கறை எடுத்து சுத்தம் செய்யாவிட்டால் எண்ணற்ற கிருமிகளின் இருப்பிடம் ஆகி விடும். நோய்க்கு குறைவே இருக்காது. எனவே கார்பெட் உபயோகிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக அதனை பராமரிக்க வேண்டும்.

* அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காதீர்கள். உங்கள் கேஸ் ஸ்டவ், ஹீட்டர், சிம்னி இவைகளை முறையாய் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
இயற்கை முறையில் மூளையினை ஆரோக்கியமாக வைக்கும் வழிகள் ஒருவரது மூளை அவரது உடலின் முக்கியமான உறுப்பு. மூளையினையும் மனதினையும் இங்கு பிரித்து பார்க்க வேண்டும். இங்கு குறிப்பிடப்படுவது மூளையினைப் பற்றிதான்.

* தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். இது உங்கள் மூளை, மனது, உடல் மூன்றினையும் பாதுகாக்கும். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் கலாச்சாரத்தில் பிணைந்த இது மிகப்பெரிய இயற்கை மருந்து. வயிறு காலியாய் இருக்கும் நேரத்தில், அமைதியாய் ஓர் இடத்தில் அமர்ந்து, முதுகு நிமிர அமர்ந்து, கண்களை மூடி மூச்சினை மட்டும் கவனித்தால் போதும் மூச்சு நிதானமாய் நிகழ வேண்டும். இதனை காலையில் செய்வது மிகவும் நல்லது.
* எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருங்கள். அப்பொழுதுதான் மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும்.

* பகலில் 20 நிமிடங்கள் நாற்காலி (அ) சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி ஓய்வு எடுங்கள். இது உங்கள் மூளையின் செயல்திறனை வெகுவாய் கூட்டும்.

* குறுக்கெழுத்து போட்டிகள், புதிர்கள் இவைகளைச் செய்யுங்கள்.

* ஒரு நேரத்தில் செய்யும் வேலை ஒன்றின் மீதே கவனம் செலுத்துங்கள். போன் பேசிக் கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே அப்படியே டிவியும் பார்ப்பது போன்ற செயல்களால் மூளையால் எதனையும் முழுமையாய் கையாள முடியாது.

* புதுமொழி ஒன்றினைக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்கு வயது வரம்பு கிடையாது. இது மூளைக்கான சிறந்த பயிற்சி.

* ஆரோக்கியமான உணவினை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

* எழுதுங்கள். கம்ப்யூட்டரில் டைப் அடிப்பதனை விட எழுதுவது வலது பக்க மூளையினை நன்கு தூண்டும்.

* எதனையும் ஆக்கப் பூர்வமாகவே சிந்திக்கப் பழகுங்கள்.

* பட்டை தூளினை சிறிது, நீரில் கொதிக்க வைத்து குடியுங்கள். இது உங்களை ‘ரிலாக்ஸ்’ செய்யும்.

மன அழுத்தம் நீங்க வழிகள் - Ways-to-Stay-Out-of-Stress

மன அழுத்தம் நீங்க வழிகள் - Ways-to-Stay-Out-of-Stress
மன அழுத்தம் நீங்க வழிகள் - Ways-to-Stay-Out-of-Stress

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தற்கால சூழ்நிலையில் பள்ளிக்கு போகும் சிறுவர்கள் முதல் ஓய்வு பெறும் முதியோர்கள் வரை எல்லோரும் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர்.

தற்கால சூழ்நிலையில் பள்ளிக்கு போகும் சிறுவர்கள் முதல் ஓய்வு பெறும் முதியோர்கள் வரை எல்லோரும் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர்.
பள்ளிக்குப் போகும் சிறுவர்கள் பள்ளியில் ஹோம் ஒர்க் அதிகமாக கொடுக்கும் போதும், அதிகமாக படிக்க வேண்டிய நேரத்திலும், பரிட்சை சமயத்திலும், குழந்தைகளுக்கு பிரியமில்லாத ஒன்றை பல வந்தமாக திணிக்கும் போதும் பள்ளிப் படிப்புக்கு கட்ட வேண்டிய பணத்தை காலத்திற்கு சரியாக கட்ட முடியாத நிலையில் பள்ளி நேரத்தில் பல மாணவர்கள் முன்னால் பள்ளியின் ஆசிரியர் கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போதும், வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் முன்னால் அடிக்கடி சண்டை போடும் போதும், சிறு வயதினர் தனக்கு ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்த போது இதுநாள் வரைக்கும் தன் மீது அதிக பிரியத்தை காட்டிய பெற்றோர்கள் தன்னைவிட பிறந்த குழந்தையின் மீது அதிக பிரியத்தை காட்டும்போதும் சிறுவயதினர் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தலைவலி, கழுத்துவலி, வயிற்று வலி போன்ற கோளாறுகளுக்கு உட்படுவர். மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போய் காட்டும் போது மருத்துவர் பரிசோதித்து பார்த்து உடலில் எந்தவிதமான கோளாறும் இல்லை என்று கூறிவிடுவார்.


 பெற்றோர்கள் தன் பிள்ளைகள் ஒரு டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் பள்ளி இறுதி ஆண்டில் 90 சதவீதம் விட அதிக மார்க் வாங்க வேண்டும். இல்லையென்றால் கல்லூரியில் இடம் கிடைக்காது என்று அடிக்கடி கூறும்போது அதிக மார்க் வேண்டுமே என்று மாணவ, மாணவியர்கள் பயப்படும் போது அதிக மன அழுத்தத்திற்கு உட்பட்டு உயர் ரத்த அழுத்தம், வயிற்றில் புண், அதிக அமில சுரப்பு போன்றவைகளால் பாதிக்கப்படுவர்.

கல்லூரி படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் அல்லது நன்கு கவனம் செலுத்தி படிப்பவர்களும் கூட காதல் போன்ற விஷயங்களில் சிக்கிக் கொண்டு பிறகு குடும்பத்திற்கு தெரியக்கூடாது என்று மறைக்க முயலும் போதும், குடும்பத்திற்கு தெரிந்த பிறகு பெற்றோர்களால் கடுமையாக கண்டிக்கப்படும் போதும் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியாமல் மனபாதிப்புக்கு உள்ளாவர். பள்ளி பருவத்திலிருந்து கல்லூரி படிப்பு முடியும் காலம் வரை நேரத்திற்கு சரியாக பிள்ளைகள் வீட்டுக்கு வரவில்லை என்றால் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டார்கள் அல்லது பிள்ளைகள் தவறான பாதையில் போகிறார்களா என நினைத்து பெற்றோர்கள் கலக்க முறுவர்.

கல்லூரி படிப்பிற்கு பிறகு தனது படிப்புக்கு தகுந்த உத்தியோகம் கிடைக்காத போதும் தனக்கு பிரியமில்லாமல் திருமணம் செய்து கொண்ட நிலையிலும் படிப்பிற்கு எந்த ஒரு வேலையையும் செய்யாமல் ஊர்சுற்றி வரும் பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்கள் தன் சுற்றம், நண்பர்கள், அக்கம் பக்கம் உள்ள வீட்டினரிடம் குறை கூறும்போதும், வாகனங்களில் செல்லும் போது நெரிசலான இடங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தி போகும் போதும் ஒரு பாதிப்புக்கு உள்ளாவர்.

பெரியவர்கள் சொத்துத் தகராறு, தொழிலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, வீட்டில் யாராவது இறந்து போதல், உத்தியோகத்தில் மேலதிகாரி அல்லது தனக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் விவாதிக்கும்போது, தனது வேலையை சரியாக செய்யாமல் சிக்கிக் கொள்ளும் போதும், வயதானவர்கள் தன்னுடைய பிள்ளைகள் தன்னை சரியாக கவனிக்காமல் உதாசீனப்படுத்தும் போதும், இப்படி வாழ்க்கையில் பல சூழ்நிலையில் பல கால கட்டங்களில் பல்வேறு காரணங்களினால் கோபப்படுவது தவறு செய்வதனால் ஏற்படும் குற்ற உணர்வு, பயப்படுவது, சலிப்புறுவது மற்றும் கோபப்படுவதினால் உடலும், மனமும் அதிகளவு பாதிக்கப்படுகிறது.

மனஅழுத்தம் ஏற்படும் ஒவ்வொரு சமயமும் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரியின் மூலம் உடலின் இயக்கம் அனைத்தும் அதிக பரபரப்புடன் செயல்படத் தூண்டுகிறது மூளை. இதனால் இருதயத்துடிப்பு அதிகரித்து தசை நரம்புகளில் ரத்தத்தை அதிகமாக நிரப்புகிறது. உமிழ்நீர் சுரப்பிகள் அடைப்பட்டு வாய் உலர்ந்து போகிறது. பிராண வாயு தேவைக்காக சுவாசம் வேகப்படுகிறது. சக்தி பெருக சர்க்கரையும் கொழுப்பும் ஏராளமாக ஈரலில் இருந்து வெளியேறுகிறது. ஜீரணிப்பு நின்று போகிறது. அதனால் ரத்தம் தசைகளுக்குள் திசை மாறி பாய்கிறது. அகண்ட கண் பார்வை உண்டாகிறது. உடலில் வியர்வை பெருகி சூடு குறைகிறது. அட்ரினலின், நாரட்னயின் போன்ற ஹார்மோன்களை அட்ரீனல் சுரப்பி வெளியிடுகின்றன. தோல் சார்ந்த உபரிக் கொழுப்பும், ரத்தத்துக்குள் கலந்து விடுகின்றன.

கழிவு அகற்றும் குடலும், சிறுநீரகமும் வேலையை குறைத்துக் கொள்வதால் உடல் தொடங்குகிறது. இதனால் உடலின் இயல்பான இயக்கம் பாதிக்கப்படுகிறது.
மனித உடலில் நரம்புகள் மற்றும் நாளமில்லா சுரப்பி தொகுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் வரையில் உடலும், மனமும் புற உலக பாதிப்புக்கு உட்படும் போது, சிறிது நேரத்தில் மீண்டும் தனது இயல்பான செயல் நிலைக்கு திரும்புகின்றன. ஆனால் நரம்புத் தொகுப்பு மற்றும் சுரப்பிகளின் ஹார்மோன் அளவுகள் இடையிலான சமநிலை பாதிக்கப்பட்டால் ரத்த அழுத்தம், உடல், மனசோர்வு, மனஉளைச்சல் மற்றும் நரம்பு தொடர்பான நோய்களும் உண்டாகின்றன.

மேலும் முக்கிய சுரப்பிகளின் செயல்பாடு சீர்குலையும் போது உடலின் வளர் சிதை மாற்ற சமநிலை பாதிக்கப்பட்டு உடலில் பல கடுமையான நோய்களை தோற்றுவிக்கின்றன. யோகாசனங்களின் ஒவ்வொரு நிலைகளும் ஒரு குறிப்பிட்ட முறையில் செயலாற்றி நரம்பு மண்டலத்தை தூய்மைப்படுத்தி பலப்படுத்துவதுடன் அங்கு நரம்பு வேதியல் செய்து பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் அனைத்து நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தையும் சீர்படுத்தி சமநிலையில் செயல்படத்தூண்டுகின்றன.

தினமும் 15-20 நிமிடம் செய்யும் பிராணாயாமம் யோக நித்திரை, தியானம் போன்ற பயிற்சிகள் மனஇறுக்கம், அழுத்தத்தை நீக்குவதுடன் அன்றாட வாழ்க்கையில் நமது மனம் இரண்டு நிலையில் செயல்படும் ஆற்றலை அளிக்கின்றன. ஒன்றுபுற உலக பாதிப்பிற்கு மனம் உட்பட்டாலும், உடனடியாக தனது இயல்பான நிலைக்கு திரும்பும் ஆற்றல், மற்றொன்று புறவுலக பாதிப்புகளை எதிர்த்து செயல்படுதலும் அப்படி செய்யப்படும் போது உடல் இயக்கம் பாதிக்கப்படாமல் மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. மனஅழுத்தத்தை நீக்குவதற்கு பல்வேறு யோகப் பயிற்சிகள் உள்ளன.

வாயு தொல்லை - கொழுப்பை குறைக்கும் பிரண்டை

வாயு தொல்லை - கொழுப்பை குறைக்கும் பிரண்டை
Gas-trouble-cholesterol-control-pirandai.

வாயு தொல்லை - கொழுப்பை குறைக்கும் பிரண்டை

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு மருந்தாக என பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது பிரண்டை.

எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு மருந்தாக அமைவதுமான பிரண்டையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?. வீட்டில் எளிதில் வளர்க்க கூடிய பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.


எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.

வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.

பவன முக்தாசனம் செய்வது எப்படி?

பவன முக்தாசனம் செய்வது எப்படி?
pavana-mukthasanam.

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

‘பவன’ என்றால் பிராணவாயு ‘முக்த’ என்றால் விடுவிப்பது. ‘ஆசனம் என்றால் இருக்கை உடலில் பிராண வாயு செல்லும் பாதைகளில் ஏற்படும் அடைப்பை நீக்கி பிராண வாயுவை மிகச் செய்வதால் இப்பயிற்சிக்கு பவன முக்தாசனம் என்று பெயர்.

பெயர் விளக்கம்: ‘பவன’ என்றால் பிராணவாயு ‘முக்த’ என்றால் விடுவிப்பது. ‘ஆசனம் என்றால் இருக்கை உடலில் பிராண வாயு செல்லும் பாதைகளில் ஏற்படும் அடைப்பை நீக்கி பிராண வாயுவை மிகச் செய்வதால் இப்பயிற்சிக்கு பவன முக்தாசனம் என்று பெயர்.

பயிற்சி 1 : கால் விரல்களை வளைத்தல் :


தரை விரிப்பின் மேல் கால்கள் இரண்டையும் நீட்டி வைத்து (தண்டாசனத்தில்) அமரவும். மூச்சை வெளியே விட்டபடி இருகால் விரல்களையும் முன் நோக்கி நிதானமாக வளைக்கவும். மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி நிதானமாக இரு கால் விரல்களையும் பின்னோக்கி வளைக்கவும்.
இது ஒரு சுற்று பயிற்சி ஆகும். இப்படி 10 சுற்று பயிற்சி செய்யவும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: பவன முக்தாசனத்தில் வரும் ஒவ்வொரு பயிற்சியிலும் உடலின் எந்த பகுதிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதோ அந்த பகுதியை மனதால் நினைத்து செய்யவும்.

பயிற்சி 2 குதிகாலை வளைத்தல் : தண்டாசனத்தில் அமரவும். மூச்சை வெளியே விட்டபடி இருபாதங்களையும் நிதானமாக முன்னோக்கி வளைக்கவும்.
மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி இருபாதத்தையும் பின்நோக்கி வளைக்கவும். இது ஒரு சுற்று ஆகும். இப்படி 10 சுற்று பயிற்சி செய்யவும்.

பயிற்சி 3 குதிகாலை சுழற்றுதல்: தண்டாசனத்தில் அமரவும். நிதானமாக இரு பாதங்களையும் இடமிருந்து வலமாக 10 முறை சுழற்றவும். பிறகு இரு பாதங்களையும் வலமிருந்து இடமாக 10 முறை சுழற்றவும். இப்பயிற்சியில் கீழ்நோக்கி கொண்டு போகும் போது மூச்சை வெளியே விடவும். பாதத்தை நேராக கொண்டு வரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.

பயிற்சி 4 : குதிகாலை முன்னுக்கும், பின்னுக்குமாக சுழற்றுதல் : தண்டாசனத்தில் அமரவும். வலது முழங்காலை மடக்கி குதிகாலை நீட்டி வைத்திருக்கும் இடது காலின் தொடைக்கு வெளியே வைக்கவும். வலது கை விரல்களால் வலது கால் மேல்பகுதியை பிடிக்கவும். நிதானமாக பாதத்தை இடமிருந்து வலமாக 10 முறையும், வலமிருந்து இடமாக 10 முறையும் சுழற்றவும். பிறகு இடது காலை மடக்கி மேல் கண்ட முறைப்படி செய்யவும். இப்பயிற்சியில் பாதத்தை மேலே தூக்கும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். கீழே இறக்கும்போது மூச்சை வெளியே விடவும்.

ஆரோக்கியமானது பச்சை உணவா? வேகவைத்த உணவா?

ஆரோக்கியமானது பச்சை உணவா? வேகவைத்த உணவா?
healthy-green-foods-or-Boiled-food.


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். இதனை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். சில சமயங்களில் பச்சையாக உண்ணும் போது செரிமானப் பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

வெயில் காலத்தில் பச்சை உணவுகளை சாப்பிடலாம் என கூறப்படுகிறது. காய்கறி, பழங்கள் போன்றவற்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மற்றும் இரவு உணவு, குளிர் காலத்தில் பச்சை உணவுகளை தவிர்த்தல் நல்லது.

வேக வைக்காத அல்லது சமைக்காத பச்சை உணவுகள் உடலில் சேதம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. ஆயுர்வேத முறையில் வேக வைக்காத உணவு, செரிமானம், உடல் வெப்ப நிலை, முடி உதிர்தல், தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.

காய்கறி மற்றும் பழங்களை ஜூஸாக பருகுவது சிறந்த முறை. இவை ஊட்டச்சத்துக்களை அளிப்பது மட்டுமின்றி, எளிதாக செரிமானம் ஆகிவிடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் பழங்களை கடித்து உண்பது தான் நல்லது.



உடலில் உள்ள நச்சுக்களை போக்க, ஆப்பிள், பப்பாளி, பெர்ரி, அன்னாசி, பேரிக்காய், துளசி போன்ற உணவுகளை பச்சையாக அல்லது ஜூஸாக அப்படியே சாப்பிடலாம். மேலும் இஞ்சி, மஞ்சள், கொத்தமல்லி, வெந்தையம், சீரகம் போன்ற உணவுப் பொருட்களை காய்கறி சூப் போன்று சமைத்து உட்கொண்டாலும் உடலிலுள்ள நச்சுக்களை போக்க முடியும்.

உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை அப்படியே தங்க வைக்க, குறைவான சூட்டில் வேக வைப்பது தான் சிறந்த முறையாகும். இவ்வாறு சமைப்பதால் உணவில் ஊட்டச்சத்து தங்குவது மட்டுமின்றி, செரிமானமும் சீரிய முறையில் இயங்க வழிவகுக்கும்.

மைக்ரோவேவில் மீண்டும் சூடு செய்வதால், அதிலிருந்து வெளிப்படும் சூடு, உணவில் இருக்கும் மூலக்கூறுகளை சிதைத்துவிடுகிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் என்பதால் மைக்ரோவேவ் ஓவனை தவிர்ப்பது நல்லது.

மஞ்சள், சீரகம், மிளகு சேர்த்து உணவை சமைப்பது சிறந்த முறை ஆகும். இவை உடலுக்கு வலிமையும், நலனும் அதிகரிக்க வைக்கின்றன. மேலும் மிகுதியாய் வேகாமல் அல்லது கருகிவிடாமல் சமைக்க வேண்டும்.

ஃப்ர்ட்ஜில் வைத்து பயன்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இன்று சமைத்த உணவை இன்றே சாப்பிட்டு விடுவது தான் சிறந்த முறை. எனவே, ஃப்ரிட்ஜில் வைத்து நாட்கள் கடத்தி உணவை உண்ணும் பழக்கத்தை கைவிடுங்கள். இது செரிமான பிரச்சனைகள் உண்டாக முக்கிய காரணமாகும்.

முகவாதம் அறிகுறிகளும் - சிகிச்சை முறைகளும்

முகவாதம் அறிகுறிகளும் - சிகிச்சை முறைகளும்
facioplegia-systemes-treatment


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

முகவாதம் 80 வகையான வாத வியாதிகளுள் ஒன்றாகும். இந்த நோய் வருவதற்கான காரணத்தையும், அறிகுறியையும், செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளையும் பார்க்கலாம்.

முகம் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். பயம், கோபம், துக்கம், மகிழ்ச்சி முதலான மனதின் உணர்வுகளை முகம் காட்டிக் கொடுக்கும். முகத்தின் அசைவுகள், உணர்வுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும், வழிநடத்தும் பொறுப்பு தலையுடையது. தலைதான், மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாகம்.
மனிதன் மட்டுமே, முக அசைவுகளின் மூலமும், பேச்சின் மூலமும் பிறருடன் தொடர்பு கொள்ள முடியும். முக அசைவு மற்றும் பேச்சு இரண்டுமோ அல்லது இரண்டில் ஒன்று மட்டுமோ தடைப்படுவது முகவாதம் எனப்படும்.

முகவாதம் 80 வகையான வாத வியாதிகளுள் ஒன்றாகும். வாத தோஷத்தின் இயல்புநிலை மாறி விடுவதால் வரும் இவ்வியாதியால், உடலின் இயல்பான செயல்பாடுகள் குறைந்து, ஊனம் அடைய நேரலாம். இறப்பு கூட வரலாம். உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை வேறுப்படுத்தும் 5 பொறிகளின் வேலை முடங்குகிறது. சூழலுடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

ஐம்பொறிகளின் வெளிப்பாடுகள் நிகழ காரணமாக திகழ்வது வாதம், இவற்றின் செயல்பாடுகளில் தடை ஏற்படுவதால் வாதம் இந்திரியங்களை பழுதாக்குவதாக கூட சொல்லப்படும். இந்நோய் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய சூழலில் குளிர்ந்த காற்று, குளிர்ந்த சூழ்நிலையில் அதிகம் இருப்போருக்கு அதிகம் இந்நோய் வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த ஒழிக்க இது தகுந்த தருணம் ஆகும்.

முகத்தின் இடது, வலது பக்கம் கோணலாகி விடுவது முகவாதம். அத்துடன் பாதிக்கப்பட்ட இடத்தில் அசைவு, உணர்ச்சி ஆகியன இயல்புநின்ற மாறிவிடும். இந்நோய், முகத்தின் ஒரு பக்கத்தோடு சேர்ந்து உடலின் பகுதிகளிலும் பாதிப்பு வரலாம். அல்லது வராமலும் இருக்கலாம். ஆயுர்வேத சிகிச்சை மூலம் நிலைப்பாடு மாறிய வாததோஷத்தை சரிப்படுத்தி குணமாக்க முடியும். தும்மலை அடக்குவதால் இந்நோய் வருகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

மேலும் அதிகநேரம் சத்தமாக பேசுவது, கடினமான, உணவுபொருட்களை மெல்லுவது, அதிகப்படியான சிரிப்பு, தும்மல், கொட்டாவி, தலையில் அதிக சுமை சுமத்தல், தலை மற்றும் கழுத்தை, திடீரென திருப்புவது, தூங்கும் போது சரியான நிலையில் தூங்காமை, தலையணை அதிக உயரமாகவோ, குறைந்த உயரமாகவோ இருத்தல் ஆகிய காரணங்களால் கூட நேரலாம். ரத்தசோகை ஏற்படும்போது இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது. மகளிர் கருவுறும்போதும், குழந்தை பிறப்புக்குபின்னும் இந்நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள், வயதானவர்கள், உடல் மிகவும் மெலிந்து இருப்பவர்கள் ஆகியோருக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

நோய் வருமுன் காணப்படும் அறிகுறிகள்

* பார்வை மங்குதல்
* தோலில் தொடு உணர்ச்சி குறைதல்
* கழுத்தில் ஒருவித இறுக்கம்
* தாடைகளில் இறுக்கம்
* மயிர்க்கூச்செறிதல் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

நோய் அறிகுறிகள்

* முகம் சரியான கோணத்தில் இருந்து விலகி, ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளல்
* தலை நடுக்கம்
* பற்கள் நடுக்கம்
* கண்களை சரியாக மூட முடியாமை.
* மூக்கு கோணல்
* பேசுவதில் சிரமம்
* குரலில் கரகரப்பு
* காது கேளாமை

* காதில் வலி
* வாசனையை நுகர முடியாமை
* உணவை, மென்று விழுங்குவதில் சிரமம்
* கழுத்து, கன்னம், பல் ஆகியவற்றில் கடும் வலி
* மறதி, பேசும் போதும, சிரிக்கும் போது வாய் கோணல்
* தூங்கும் போது ஒரு வித பயம் ஆகிய அறிகுறிகள் தென்படும்.  பெல்பால்சி எனப்படும் கடுமையான முகவாதம் முகத்தின நரம்புகளில் நீர் கோர்த்து, பலூன் போல் உப்புவதால் இந் நோய் ஏற்படுகிறது.

* வழக்கமாக ஒரு பக்கம் மட்டும் வரும் இவ்வகை வாதம் சில சமயம் இரு பக்கமும் வரும்.
* காதுக்குள், கன்னத்தில், காதுக்கு பின்புறம் சைனஸ் இடத்தில் வலி இருக்கும்.
* திடீரென உருவாகும்-
* முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் தசைகளில் வாதம் வரும்.
* புருவத்தை உயர்த்த முமயாமை, இமைகள் மூடிக் கொள்ளல்.
* கண்களை மூட முடியாமை
* சாப்பிடும் போது புரையேறுதல்

* கண்களை மூட முயலும் போது கண்களின் விழிக் கோளம், மேலும் கீழும் உருளும். இது பெல்ஸ் பினோமினம் எனப்படும்.
* கண்களில் நீர் வடிந்து கொண்டே இருத்தல்.
* காதின் நடுப்பகுதியில் ரத்த ஓட்டத்தில், பாதிப்பு ஏற்பட்டால் நாக்கில் சுவை உணர்வு குறைந்து விடும்
* காதுகளில் இயல்பான சப்தத்துக்கு மாறாக, மிக அதிக தொனியில் இரைச்சல் கேட்கும்.
* சில சமயம் காது கேளாமை கூட நேரும்.

நோய் வந்திருப்பவர் பலசாலியாக இருப்பின் நோய் விரைவில் குணமாகும். நோய் வந்தவுடன் சிகிச்சை தரப்படினும், நோய் விரைவில் குணமாகும். நோயாளி பலமில்லாதவராக இருப்பினும் கண்களை மூட முடியாமல் இருந்தாலும், பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் நடுக்கம் இருந்தாலும், நோய் வந்து 3 வருடங்கள் ஆகியிருந்தாலும் வாய், கண்கள், மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தாலும் அந்த நோயாளியை குணப்படுத்துவது சிரமம்.



சிகிச்சை முறை

* தலைக்கு எண்ணெய் தேய்ப்பது.
* மூக்கில், காதில் மருந்து விடுதல்.
* பாலில் மருந்து கலந்து, அதைச் சூடுபடுத்தி, வெளிவரும் ஆவியை முகருவது.
* ‘பத்து’ போடுவது.
* தலைக்கு மேலே எண்ணெயை நிற்குமாறு செய்வது.
* புகையை நுகருவது.

* எண்ணெய் தேய்ப்பது ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
* அத்துடன், தோஷங்களின் நிலைப்பாட்டைப் பொறுத்து நீர்கோர்த்து, உப்பியிருந்தால் ‘வாந்தி’ வருமாறு செய்வர்.
* தாகம் மற்றும் எரியும் தன்மை இருந்தால், அட்டைப்பூச்சியை உபயோகித்து அல்லது காயப்படுத்தி, ரத்தம் வெளியேறுமாறு செய்வர்.
* பாதைகள் அடைப்பட்டிருந்தால், முதலில் அடைப்பை நீக்க சிகிச்சை தரப்படும். பின் வாதத்தைக் குறைக்க, சிகிச்சை தரப்படும்.

மருந்து முறை:

* தனதநயானதி கஷாயம்.
* மஹா ராசநாதி கஷாயம்.
* மாஷாபலாதி கஷாயம்.
* ராசன தச மூலாதி குவேதா கஷாயம் ஆகியவை உள்ளே சாப்பிடத் தரப்படலாம்.
* மாஷா தைலம்.
* மாஷாதி தைலம்.
* மாஷா பலாதி தைலம்.

* கார்ப்ப சயாதி தைலம்.
* தன்வந்த்ரம் தைலம்.
* மஹாமாஷா தைலம்.
* ஹீரபலா தைலம்.
ஆகியவை வெளிப்புற உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும்.

சிறப்பு சிகிச்சைகள்:

* ஸ்ரீரதூமம் எனப்படும் பால் கஷாயத்தின் புகையை நுகர்வது நல்ல பலனைத்தரும். முகத்தில் ‘ஸ்ரீரபலா101 தைலத்தைக் பூசிக்கொண்டு சித்தா முட்டி வேரைப் பாலில் போட்டுக் காய்ச்சி, அதிலிருந்து வரும் புகையை முகத்தில் படுமாறு அரை மணி நேரம் செய்ய வேண்டும்.

பின், மூக்கில் 2 சொட்டு ‘ஸ்ரீரபலா101’ தைலத்தை விட வேண்டும். இருமல், தும்மல் எல்லாம் வந்து முடிந்தபின், (கழிவு வெளியேறும்) முகத்தை வெந்நீரில் கழுவலாம் அல்லது துடைத்து விடலாம். இதனை, தினம் ஒரே ஒரு முறை காலை அல்லது மாலையில் செய்ய வேண்டும், வெயில் நேரம் ஆகாது. இச்சிகிச்சை மிகுந்த பலன் தருவதாகும். * முகத்திலிருக்கும் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

உணவு முறை:

* வாதத்தை அதிகரிக்கும் உணவுகளான கொண்டைக் கடலை, நிலக்கடலை, கிழங்கு வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
 * எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்
* நாட்டுக் காய்கறிகளை உண்பது நல்லது.

தவிர்க்கும் வழிகள்

* எளிதில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது.
* அதிக மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றைத் தவிர்ப்பது
* பயணத்தின் போதும் பிற சமயங்களிலும் அதிக குளிர்ச்சியான காற்று முகத்தில் படாமல் பாதுகாப்பது.
* தொடர்ந்து ஏசி அறைகளில் இருப்பதை தவிர்ப்பது.
* வாதத்தை அதிகரிக்கும் உணவுகளை தொடர்ந்து அதிகம் உண்ணாமல் இருப்பது ஆகியன இந்நோய் வராமல் தடுப்பதற்கான சில வழிமுறைகள் ஆகும்.
உடனிருப்போரின் பெரும் பங்கு

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்படும் தாழ்வுணர்ச்சி வந்துவிடும். சமூகத்திலிருந்து விலகி இருக்க நினைப்பர், தனிமை மேலும் மன உலைச்சலை அதிகப்படுத்தும். இதனை உடனிருப்போர் உணர்ந்து நோயாளிக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் தக்க முறையில் பேசி மன உலைச்சல் தவிர்க்கப்பட வேண்டும்.

உடல் அளவில் அவர்களது பாதிப்புக்கு உதவுவதற்கு மேலே அவர்களது மன பாதிப்பு நீக்கப்பாடுபடுவது மிக முக்கிமானது. குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது, மருந்து கொடுப்பதில் நேரம் தவறாமை, உணவு கொடுப்பதில் கவனம். வெளிளே அழைத்து போவது, அதிக நேரம் அவர்களுக் காக செலவிடுவது என உடனிருப்போர் பங்கு அதிகமானது மிகவும் முக்கியமானது.

புணர் வாழ்வு

நோயின் பாதிப்புக்கு தகுந்தபடி குணப்படுத்தும் காலமும் வேறுபடும்.

* பாதிப்பு குறைவாக இருந்து உடனே சிகிச்சையை மேற்கொண்டால் நோய் சரியாகலாம். இந்நோயுடன் வேறுபாதிப்புகள் இல்லாமலிருந்தாலும் விரைவில் குணமாகலாம்.

* பாதிப்பு அதிகமாக இருந்தாலோ சிகிச்சை தொடங்க தாமதம் ஆனாலோ கூட வேறு உடல் பாதிப்புகள் இருந்தாலோ முழுதும் குணமாக காலதாமதம் ஆகும். முழுவதும் குணமாகமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.ஆகவே வந்தபின் குணமடையச் சிரமம் மேற்கொள்வதை விட வராமல் பாதுகாப்பது சிறந்தது.

உணவுக்குழாயைக் காக்க 5 வழிகள்!

உணவுக்குழாயைக் காக்க 5 வழிகள்!
Why-is-the-esophagus-affected


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
நமது மாறிவரும் உணவு முறை போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனையும், அதனை தீர்க்கும் வழிமுறையையும் பார்க்கலாம்.

வாயில் உணவை மெல்லும்போதே, 25 சதவிகிதம் செரிமானச் செயல்பாடு நடக்கத் தொடங்கிவிடும். உணவுக்குழாயில் எந்தவித அமிலச் சுரப்பிகளும் கிடையாது. இரைப்பையைத் தவிர, எங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பட்டாலும், அது உணவுக்குழாயை அரிக்கத் தொடங்கும். இதனால், நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

புகை, மது, சூடாகச் சாப்பிடுதல், சாப்பிடாமலேயே இருத்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், புளிப்பு, உப்பு, காரம் அதிகமாகச் சாப்பிடுதல், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சூடான காபி, டீ குடித்தல் போன்ற காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கும்.

மாத்திரைகளால் ஏற்படும் விளைவுகள்

நெஞ்சு எரிச்சல் பிரச்சனைக்கு, நவீன மருத்துவத்தில் ஜெல் மருந்து, ஆன்ட்டாசிட் போன்ற மாத்திரைகளைத் தருகின்றனர். இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே (HCL Secretion) செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்சனை போன்றவையும் ஏற்படலாம்.

உணவுக்குழாயைக் காக்க…

காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்தின் ஆரம்பம். இது, நம் உடலில் வாதம், பித்தம், கபத்தை சமன்படுத்த உதவும். காலை எழுந்தவுடன் திடமான உணவைச் சாப்பிடுவதுகூட உணவுக் குழாயைப் பாதிக்கலாம்.

மணத்தக்காளிக் கீரை, மாதுளை, வாழை,  பால், தண்ணீர்விட்டான் கிழங்கு, பரங்கிக்காய், பூசணி, வெண்பூசணி லேகியம், பிடிகருணை, சீரகத் தண்ணீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து காய்கறிகள், கனிகள், கீரைகள், சுத்தமான தண்ணீர் ஆகியவை உணவுக்குழாய் பிரச்சனையைச் சரிசெய்யும்.

உணவுக்குழாயைக் காக்க 5 வழிகள்!

உணவை எப்போதும் மென்று தின்னும் பழக்கம் அவசியம்.

காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் நீர் அருந்த வேண்டும்.

சீரக நீர் பருகுவதால், உணவுக்குழாய் தொடர்பான பிரச்சனை வராது.

நீர், நார்ச்சத்து உணவுகளைப் பிரதானமாக சாப்பிடுவது நல்லது.

சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

“காலையில் இஞ்சி… நண்பகல் சுக்கு… மாலை கடுக்காய்… ஒரு மண்டலம் உண்ண வயோதிகனும் வாலிபன் ஆவானே” என்ற சித்தரின் வாக்குப்படி, காலையிலே உண்ணும் உணவுதான், உணவுக்குழாய்க்கு நாம் கொடுக்கும் முதல் உணவு.

கற்றாழை: காலையில் முதல் உணவாகப் பருகும்போது, இதில் உள்ள கொலஜன் மற்றும் ஃபைபர், புண்களைக் குணமாக்கிவிடும். எரிச்சல் உணர்வை நீக்கும். ஆன்டிகேன்சர் மற்றும் ஆன்டி டியூமராக கற்றாழை செயல்படுகிறது.

வெள்ளரி: வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும். உணவுக்குழாய் தொடர்பானப் பிரச்சனையைச் சரிசெய்யும்.

இஞ்சி: இதில் உள்ள ஃபினாலிக் காம்பவுண்ட்ஸ், உணவுக்குழாய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்களை வரவிடாமல் செய்யும். உமிழ்நீர் சுரக்க உதவும். செரிமான செயல்பாடு எளிதாகும்.

கொத்தமல்லி ஜூஸ் குடிப்பதால் நன்மை

கொத்தமல்லி ஜூஸ் குடிப்பதால் நன்மை
coriander-juice-health-benefits.


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

கொத்தமல்லி இலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிய பின்னர் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஜூஸ் தயார்.

பலன்கள்:

கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை போக்க வல்லது. குறிப்பாக சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை சரி செய்யக்  கூடியது.

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்த்துகொள்வதால்,ரத்த அழுத்தம் குறைவதாக நிருப்பிக்கப்பட்டுள்ளது.

கொத்தமல்லியை ஜூஸ் போட்டு குடிப்பதால், உடம்பிலுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கொத்தமல்லியில் உள்ள என்சைம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாகவும் சீராகவும் செயல்பட வைக்கும். இரத்த சோகை  இருப்பவர்கள் இதை குடித்தால் நல்ல பலனை பெறலாம். மேலும் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இதை தொடர்ச்சியாக குடித்து வந்தால் இரத்த  அழுத்தம் குறையும்.

செரிமானத்தை சீராக்கி குடல் மற்றும் இரைப்பைக்கு நன்மை அளிக்கிறது. கொத்தமல்லி அதிக அளவிலான கால்சியத்தை கொண்டுள்ளது. எனவே எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.

ஆரோக்கியமான மூளைக்கு ஆப்பிள் சாப்பிடுங்க

ஆரோக்கியமான மூளைக்கு ஆப்பிள் சாப்பிடுங்க
Eat-the-apple-for-healthy-brains.


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும்.

நினைவுத்திறன் அதிகரிக்க, ஞாபக மறதியை நீக்க வல்லாரைக் கீரை சாப்பிடுங்க! என்று சொல்வது வழக்கம். இனி, ஆப்பிளும் சாப்பிடுங்க என்று சொல்லலாம். ஆப்பிள் சாறுக்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நம்மில் பலருக்கு வயது ஏற, ஏற நினைவாற்றல் குறைந்து மறதி ஏற்படுவது இயல்பாகவே உள்ளது. மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும்.


மேலும், வயது ஏற ஏற ஏற்படும் ஞாபக மறதியும் தடுக்கப்படும் என்று மெசக்யுசெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆரோக்கியமான மூளைக்கு ஆப்பிள்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவாகும்.

இவை செரிமானத்துக்கும், உடல் எடை குறைவுக்கும் ஆப்பிள்கள் ஏற்றவை. ஆப்பிள்களில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்த் தடுப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. உலக அளவில் 7,500 ஆப்பிள் வகைகள் பயிரிடப்படுகின்றன.

உணவை சூடுபடுத்தி சாப்பிடுவது உடலுக்கு கேடு

உணவை சூடுபடுத்தி சாப்பிடுவது உடலுக்கு கேடு
many-time-cooking-foods-not-good-for-health


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ஒருமுறை சமைத்த உணவு வகைகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது தவறான பழக்கம். அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீரியம் இழந்துபோய் விடும்.

சமைக்கும்போது மீதமாகும் உணவு பொருட்களை பிரிட்ஜில் சேமித்து வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கம் நிறைய வீடுகளில் நடைமுறையில் இருக்கிறது. ஒருமுறை சமைத்த உணவு வகைகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது தவறான பழக்கம். அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீரியம் இழந்துபோய் விடும். முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. முட்டையை அவித்தோ, குழம்பாகவோ, வறுவலாகவோ சமைத்தால் உடனே சாப்பிட்டுவிடவேண்டும். அதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீணாவதோடு, வயிற்று உபாதைக்கும் வழிவகுத்துவிடும்.

காளான்களில் புரதமும், தாதுக்களும் அதிகம் இருக்கிறது. அவைகளை அதிக சூடாக சமைக்கக் கூடாது. அதுபோல் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவும் கூடாது. அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும். நிறையபேர் கோழி குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். அப்படி செய்யும்போது அதில் டாக்சின் உற்பத்தியாகி விஷத்தன்மை கொண்டதாகிவிடும். அதனால் உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும்.

சாதத்தை முடிந்த அளவு சூடாக சாப்பிட வேண்டும். சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும். கீரை வகைகளையும் திரும்பவும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதில் நைட்ரேட் அதிகம் இருக்கிறது. மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும்போது நைட்ரேட் அதிகரித்து நச்சுத்தன்மை உடையதாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கொத்தமல்லி தழை, தக்காளிப்பழம் சேர்க்கப்பட்ட குழம்பு வகைகளையும் மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளையும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது. அப்படி செய்தால் எண்ணெயில் இருந்து வெளியேறும் வாயுக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்?

குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்?
When-can-children-start-toilet-training


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம்.

6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது. ஆனால், வளர வளர குழந்தைகளுக்கு இயற்கை கழிவுகள் வருகின்றன எனச் சொல்ல தெரியும். அதற்கான பயிற்சியை எப்போது தொடங்குவது? எப்படித் தொடங்குவது? என்று பார்க்கலாம்…

குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம். குழந்தைகள் 14 - 15 மாதங்களுக்கு பின்பு தானாக உட்கார்ந்து மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பதற்கானப் பழக்கத்துக்கு வருவார்கள். இந்த வயதுக்கு பின்னும் இந்தப் பழக்கத்துக்கு வரவில்லை என்றால், பெற்றோர் கட்டாயம் கழிப்பறைப் பயிற்சியைக் கொடுத்தாக வேண்டும்.


எந்தப் பருவத்தில் கழிப்பறை பயிற்சி தரலாம்?

* கழிப்பறைப் பயிற்சி தொடங்கும் முன் பேன்ட், ஜட்டி, பாவாடை போன்றவற்றை கழற்ற குழந்தைக்கு கற்று தர வேண்டும்.

* ஒருவேளை ஆடையில் சிறுநீர் மலம் கழித்துவிட்டால்கூட எப்படி பக்குவமாக கழற்றுவது என சொல்லி தர வேண்டும்.

* அதன் பின் தானாக ஆடைகளை மாட்டி கொள்ளும் முறையும் குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டும்.

* நடக்க ஆரம்பித்த குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சி சொல்லி தரலாம்.

* குழந்தைகளுக்கு மலம் கழிக்க தற்போது பிளாஸ்டிக் கழிப்பறை தொட்டிகள் கிடைக்கின்றன. அதில் அமர வைத்துப் பழக்கலாம்.

* குழந்தையை தினமும் இந்திய கழிப்பறையில் உட்கார்வது போல அமர வைத்துப் பழக்கப்படுத்தலாம். இப்படிதான் உட்கார வேண்டும் என சொல்லிக் கொடுக்கலாம்.

* தினமும் 6-10 முறை சிறுநீர் கழிக்கவும் 1 அல்லது 2 முறை மலம் கழிக்கும் பழக்கத்துக்கும் குழந்தைகளை கொண்டு வர வேண்டும். காலைக்கடன்களைக் கழிக்கும் பயிற்சியை சொல்லி தர வேண்டும்.

* சிறுநீரோ மலமோ கழிக்க வேண்டும் என உணர்வு வந்தவுடன் அம்மா, அப்பா அல்லது அருகில் இருப்பவரிடம் சொல்ல வேண்டும் எனக் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்.

* இதை ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த கூடாது. தினந்தோறும் சொல்லி குழந்தைக்கு புரிய வையுங்கள்.

* குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் வெஸ்டர்ன் கழிப்பறைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு நல்லதல்ல.

எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்க வழிகள்

எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்க வழிகள்
hair-care-tips


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தலைமுடியைப் பொறுத்தவரை அது கழுத்தளவோ, இடுப்பளவோ... நீளத்தைவிட அடர்த்தியாக, நுனி வெடிப்பில்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமானது. கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

* சின்ன வயதில் நரை வராமல் இருக்க, உடம்பில் பித்தம் பேலன்ஸாடாக இருக்க வேண்டும். அதற்கு, உங்கள் உடம்பு பித்தம் அதிகம்கொண்டதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லெண்ணெய்யில் கரிசிலாங்கண்ணி சேர்த்துக் காய்ச்சி வைத்துக்கொண்டு, தலையில் தடவி வந்தால் பித்தம் கன்ட்ரோல் ஆகும். இளநரை தள்ளிப்போகும்.


* ஆயில்பாத்தை கடமைக்குச் செய்யாமல் அனுபவித்துச் செய்யுங்கள். நல்லெண்ணெய்யோ, தேங்காயெண்ணெய்யோ தலையில் 15 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். அதற்கு மேல் ஊறினால், சிலருக்குத் தலைவலி வந்துவிடும். 15 நிமிடங்கள் கழித்து சீயக்காய்த்தூளுடன் செம்பருத்தி இலையை அரைத்து, வடிகட்டிய சாற்றைச் சேர்த்து தலையில் தேய்த்துக் குளியுங்கள். கண்டிஷனரே தேவையில்லாமல் கூந்தல் பளபளக்கும்; ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால், சீயக்காய் தேய்த்துக் குளிக்கும்போது, நிறையத் தண்ணீர்விட்டு முடியை அலச வேண்டும். இல்லையென்றால் பொடுகு வரலாம்.



* வறண்ட கூந்தல் உடையவர்கள், வாரத்துக்கு இருமுறை கொப்பரைத்தேங்காயைத் துருவி, மையாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். தலையில் சீயக்காயோ அல்லது ஷாம்பூவோ போட்டு அலசிய பிறகு, அரைத்த கொப்பரை விழுதை வேர்க்காலில் ஆரம்பித்து நுனி வரை தடவவும். 10 நிமிடங்கள் ஊறவிட்டு தண்ணீரில் அலசி விடுங்கள். கூந்தலில் எண்ணெய்ப்பசையும் இருக்கும்; அதேநேரம் முகத்தில் எண்ணெய் வழியாது. தலைமுடி வலுவாகவும் இருக்கும்.

* தலைக்குக் குளித்தவுடன், வெகு நேரத்துக்கு தலையில் டவலை கட்டிக்கொண்டே இருக்காதீர்கள். தலையில் நீர் கோர்த்துக்கொள்வதோடு, முடியின் வேர்க்கால்களும் பலவீனமாகும்.

* இரவிலேயே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, காலையில் குளிக்கிற வழக்கத்தை இன்றைக்கு நிறைய இளம்பெண்கள் செய்கிறார்கள். இது முடிக்கு நல்லது என நினைக்கிறார்கள். இது தவறு, உண்மையில் இந்தப் பழக்கம் தலைமுடியை வலுவிழக்கச் செய்து மெதுமெதுவாக கொட்டிப் போகவே செய்யும்.

* ஹென்னா பேக் இன்றைக்கு எல்லாப் பெண்களுமே போடுகிறார்கள். அப்படிப் போடும்போது, நெல்லிகாய்ப்பொடி, செம்பருத்திப்பொடி, வெந்தயப்பொடி, துளசிப்பொடி, வேப்பம்பொடி, லெமன் ஆகியவற்றைச் சேர்த்து போட்டால், ஹென்னாவால் உடம்பு ரொம்பவும் குளிர்ச்சியாவதைத் தடுப்பதோடு தலைமுடிக்கும் நல்லது.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகளும் - தீர்வும்

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகளும் - தீர்வும்
Effects-of-heat-on-the-body-and-solution


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நம் உடலில் உள்ள உஷ்ணம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடும். எனவே, நம்முடைய உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் உஷ்ணம் என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது. அதேநேரத்தில் வெப்பம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடும். எனவே, நம்முடைய உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது.

 * உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும். அப்போதே நாம் அதை கவனித்து அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.

* நம்முடைய உடல் வாதம், பித்தம், கபம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் 1: ½ : ¼ (அதாவது வாதம் முழுபங்கும், பித்தம் அரைபங்கும், கபம் கால் பங்கும்) இருக்க வேண்டும். இதில் பித்தம் அதிகரிக்கும்போது உடற்சூடு பிரச்சனை வரும். இதற்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் பின்பற்றும் வாழ்வியல் முறையும் உட்கொள்ளும் உணவுகளும்தான்.

உடற்சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடற்சூட்டை பொறுத்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், மாதவிலக்கு நாட்களின் போது பெண்களுக்கு உடல் சூடு அதிகரிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மாதவிலக்கு நாட்களின் உடற்சூடு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை உண்டுபண்ணும்.

புளிப்பு, உப்பு, காரம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் நம்முடைய உடல் மிகுந்த உஷ்ணம் அடையும். மேலும் டீ, காஃபி, கோலா போன்ற கஃபைன் வகை பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கச் செய்யும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.

உடற்சூடு பிரச்சனை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கீரை வகைகளில் மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை. அதேபோல வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.

Hold this Yoga Position for Weight loss

Hold this Yoga Position for Weight loss
                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
For Appointment  - Whatsapp - 9841986753

Hold this Yoga Position for Weight loss
Hold this Yoga Position for Weight loss

Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753

5 Effective Exercise for a Flat Stomach

5 Effective Exercise for a Flat Stomach
                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
For Appointment  - Whatsapp - 9841986753

5 Effective Exercise for a Flat Stomach
5 Effective Exercise for a Flat Stomach

Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753

Cucumber Infused Water

Cucumber Infused Water
                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
For Appointment  - Whatsapp - 9841986753

Cucumber Infused Water
Cucumber Infused Water

Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753

Coldwater and Warm Water

Coldwater and Warm Water
                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
For Appointment  - Whatsapp - 9841986753

Coldwater and Warm Water


Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753